தினம் ஒரு சிந்தனை.....
பாரம்பரியமும்.....நவீனமும்......
நாம் வாழ்வது நவீனமான உலகில்......
ஆனால் நம்மை....நம் உடலை....நம் மனதை....
தடம் புரளாமல் காக்க வேண்டி......
நம் முன்னோர்கள்....
தம் அனுபவ அறிவால் வரையறுத்து சென்றவற்றை பாரம்பரியம் என்போம்.....
நவீனத்தின் வேகத்தில் சிக்குண்டு ...அதைவிட வேகமாக நம் பாரம்பரியத்தை இழந்துகொண்டு வருகிறோம்.....
இது மன்னிக்க முடியாத குற்றம்....
அடுத்த தலைமுறைக்கு இதை மாற்றமோ, சேதமோ இல்லாமல் கடத்த வேண்டியது நம் கடமையல்ல...கடன்....
பொறுப்பற்ற நமக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக நம் முன்னோர்களின் அற்புத வாழ்க்கை முறையை......
கற்பதல்ல...
அறிந்து கொள்ளக்கூட முடியாத தண்டனையை நம் பிள்ளைகளுக்கு தரலாமா.....
நம்மிடம் இருந்தால்தானே ....நம்மை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள .....
சரி....எது நவீனம்......எது பாரம்பரியம் .....
நவீனம் என்ற பெயரில் பழையவை மொத்தமும் மூடநம்பிக்கை என எதிர்ப்பது....
பாரம்பரியம் என்ற பெயரில் நவீன கால மாற்றங்கள் எல்லாவற்றையும் தவிர்க்க முடியுமா என்ற விதண்டாவாதம் செய்வது....
இரண்டுமே முட்டாள்தனம்.....
மண்பானை தண்ணீரை விட்டுவிட்டு , பியூரிபையர் தண்ணீருக்கு காசு செலவு செய்யும் நவீனம் முட்டாள்தனம்.....
நவீன மருத்துவ முறைகள்,சேவைகளை மறுக்கும் பாரம்பரியம் முட்டாள்தனம்......
நேற்று என் மனைவிக்கும் எனக்கும் ஒரு வாக்குவாதம்.....
நன்றாக நுரை வந்தால்தான் அழுக்கு போகும்....இது அவள் கருத்து.......
நான் முன்பே கூறியதைப் போல் கடந்த சில வாரங்களாக சோப் இல்லாத குளியல்தான் என்னுடையது ....ஆரம்பத்தில் சீகக்காயை உடம்பில் தேய்த்து குளித்தேன்....
பின்னர் நாட்டு மருந்து கடையில் தேடி ஒரு பொடியை வாங்கிவந்துள்ளேன்....
இதில் இருப்பதாக கடைகாரர் சொன்னவற்றுள் சில....
கஸ்தூரி மஞ்சல்....
விளாமிச்சை வேர்....
காய்ந்த ரோஜா இதழ்கள்...
கோரை கிழங்கு ....
வெட்டிவேர்....
கார்போக அரிசி....
ஏலரிசி....
இன்னும் சில பெயர்களை கூறினார் நினைவில்லை...விலை..100கிராம் 80 ரூபாய்.
இதை போட்டு குளித்தால் நுரை வருவதில்லை....மூலிகை வாசனை வரும்....
கடந்த பத்து நாட்களாக இப்படிதான் குளிக்கிறேன்...
தளும்பும் நுரையோடும் வாசனையோடும் இருக்கும் சோப்பு குளியலுக்கும்,இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....
(சோப்பை விட அற்புதம் என மிகைப்படுத்தி சொல்ல விருப்பமில்லை)
இப்போது என் உடலில் அழுக்கில்லை....
நாற்றமில்லை .....
என்னை பார்க்கும் யாரும்,இன்று குளிக்கவில்லையா என கேட்பதும் இல்லை...
சோப்பு என்ற நவீனம் என் வாழ்வில் வந்து புதிதாக சாதித்தது என்ன......
இந்த என் கேள்விக்கு என் மனைவிடம் பதில் இல்லை....அவள் என் வாதத்தை ஏற்கவும் இல்லை....
நாளைமுதல் முகத்திற்கு மட்டும்....என்று கொஞ்சம் இறங்கியிருக்கிறாள்....
ஆனால் எங்கள் பேச்சை என் மகன் உன்னிப்பாக கவனித்தான் .......
அதுதானே எனக்கு வேண்டும்......
நாளை சமையல் எண்ணைய் பற்றி......
பாரம்பரியமும்.....நவீனமும்......
நாம் வாழ்வது நவீனமான உலகில்......
ஆனால் நம்மை....நம் உடலை....நம் மனதை....
தடம் புரளாமல் காக்க வேண்டி......
நம் முன்னோர்கள்....
தம் அனுபவ அறிவால் வரையறுத்து சென்றவற்றை பாரம்பரியம் என்போம்.....
நவீனத்தின் வேகத்தில் சிக்குண்டு ...அதைவிட வேகமாக நம் பாரம்பரியத்தை இழந்துகொண்டு வருகிறோம்.....
இது மன்னிக்க முடியாத குற்றம்....
அடுத்த தலைமுறைக்கு இதை மாற்றமோ, சேதமோ இல்லாமல் கடத்த வேண்டியது நம் கடமையல்ல...கடன்....
பொறுப்பற்ற நமக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக நம் முன்னோர்களின் அற்புத வாழ்க்கை முறையை......
கற்பதல்ல...
அறிந்து கொள்ளக்கூட முடியாத தண்டனையை நம் பிள்ளைகளுக்கு தரலாமா.....
நம்மிடம் இருந்தால்தானே ....நம்மை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள .....
சரி....எது நவீனம்......எது பாரம்பரியம் .....
நவீனம் என்ற பெயரில் பழையவை மொத்தமும் மூடநம்பிக்கை என எதிர்ப்பது....
பாரம்பரியம் என்ற பெயரில் நவீன கால மாற்றங்கள் எல்லாவற்றையும் தவிர்க்க முடியுமா என்ற விதண்டாவாதம் செய்வது....
இரண்டுமே முட்டாள்தனம்.....
மண்பானை தண்ணீரை விட்டுவிட்டு , பியூரிபையர் தண்ணீருக்கு காசு செலவு செய்யும் நவீனம் முட்டாள்தனம்.....
நவீன மருத்துவ முறைகள்,சேவைகளை மறுக்கும் பாரம்பரியம் முட்டாள்தனம்......
நேற்று என் மனைவிக்கும் எனக்கும் ஒரு வாக்குவாதம்.....
நன்றாக நுரை வந்தால்தான் அழுக்கு போகும்....இது அவள் கருத்து.......
நான் முன்பே கூறியதைப் போல் கடந்த சில வாரங்களாக சோப் இல்லாத குளியல்தான் என்னுடையது ....ஆரம்பத்தில் சீகக்காயை உடம்பில் தேய்த்து குளித்தேன்....
பின்னர் நாட்டு மருந்து கடையில் தேடி ஒரு பொடியை வாங்கிவந்துள்ளேன்....
இதில் இருப்பதாக கடைகாரர் சொன்னவற்றுள் சில....
கஸ்தூரி மஞ்சல்....
விளாமிச்சை வேர்....
காய்ந்த ரோஜா இதழ்கள்...
கோரை கிழங்கு ....
வெட்டிவேர்....
கார்போக அரிசி....
ஏலரிசி....
இன்னும் சில பெயர்களை கூறினார் நினைவில்லை...விலை..100கிராம் 80 ரூபாய்.
இதை போட்டு குளித்தால் நுரை வருவதில்லை....மூலிகை வாசனை வரும்....
கடந்த பத்து நாட்களாக இப்படிதான் குளிக்கிறேன்...
தளும்பும் நுரையோடும் வாசனையோடும் இருக்கும் சோப்பு குளியலுக்கும்,இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....
(சோப்பை விட அற்புதம் என மிகைப்படுத்தி சொல்ல விருப்பமில்லை)
இப்போது என் உடலில் அழுக்கில்லை....
நாற்றமில்லை .....
என்னை பார்க்கும் யாரும்,இன்று குளிக்கவில்லையா என கேட்பதும் இல்லை...
சோப்பு என்ற நவீனம் என் வாழ்வில் வந்து புதிதாக சாதித்தது என்ன......
இந்த என் கேள்விக்கு என் மனைவிடம் பதில் இல்லை....அவள் என் வாதத்தை ஏற்கவும் இல்லை....
நாளைமுதல் முகத்திற்கு மட்டும்....என்று கொஞ்சம் இறங்கியிருக்கிறாள்....
ஆனால் எங்கள் பேச்சை என் மகன் உன்னிப்பாக கவனித்தான் .......
அதுதானே எனக்கு வேண்டும்......
நாளை சமையல் எண்ணைய் பற்றி......
No comments:
Post a Comment